Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி போட்டோ மாத்தி ஏமாத்த முடியாது! சிப் பொருத்திய e-Passport அறிமுகம்!

Prasanth Karthick
வியாழன், 15 மே 2025 (11:32 IST)

இந்தியாவின் பாஸ்போர்ட்டுகளில் மோசடிகள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக புதிய e-Passport அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மக்கள் செல்ல பாஸ்போர்ட் அவசியமானதாக இருக்கிறது. பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் பல முறை சரி பார்க்கப்பட்டு, காவல் துறையினர் சோதித்து தகவல் அளிப்பது உள்ளிட்ட பல படிநிலைகளை தாண்டியே பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.

 

ஆனால் அந்த பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்றுவது உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் சிலர் ஈடுபடுவதும் அதிகமாக உள்ளது. இதுபோன்ற மோசடி, குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக e-Passport சேவை இந்தியாவில் அமல்படுத்தப்படுகிறது.

 

இந்த இ-பாஸ்போர்ட்டில் கடைசி பக்கத்தில் RFID சிப் பொருத்தப்பட்டிருக்கும். அதில் பாஸ்போர்ட் பயனரின் தரவுகள், கை ரேகை, முக பதிவு ஆகியவை டிஜிட்டல் முறையில் அப்டேட் செய்யப்பட்டிருக்கும். எனவே அதில் உள்ள விவரங்களை மாற்ற முடியாது. இந்த இ-பாஸ்போர்ட் முறையால் மோசடி சம்பவங்கள் தடுக்கப்படுவதுடன், விமான நிலையங்களில் பாஸ்போர்ட் சோதனை செய்வதும் எளிமையாகும் என கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments