Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளத்தை குறைக்கும் கலி காலத்தில், கூட்டி கொடுத்த Asian Paints!!

Webdunia
திங்கள், 18 மே 2020 (17:18 IST)
ஊழியரின் மன உறுதியை அதிகரிக்க ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் ஊதிய உயர்வு அளித்துள்ளது. 

 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96,169 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,029 ஆக உயர்ந்துள்ளது. 
 
கொரோனாவால் விளைந்த 50 நாட்களுக்கும் மேலான ஊரடங்கால் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்தை குறைத்துள்ள நிலையில், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்க  ஊதியத்தை அதிகரித்து வழங்கியுள்ளது.
 
இது குறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி அமித் சைங்கிள் தெரிவித்ததாவது, பங்குதாரர்களின் நலன்களை கருதும் உண்மையான தலைமை மற்றும் நிறுவனத்திற்கு எடுத்துக்காட்டாக நாங்கள் இருக்க நினைக்கிறோம். ஒவ்வொரு ஊழியரின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கான ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments