Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயில் சப்ளை கட்: ஏர் இந்தியாவுக்கு பாரத் & ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் வார்னிங்!!

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (10:11 IST)
நிலுவை தொகை செலுத்தவில்லை என்றால் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும் என பாரத் & ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஏர் இந்தியாவை எச்சரித்துள்ளது. 
 
ஏர் இந்தியா நிறுவனம் நிதி நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது. இதனால், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு எரிபொருளுக்கான பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை தொகையை செலுத்தாமல் காலம் கடத்தி வந்துள்ளது. 
 
இதனால், அந்நிறுவனங்கள் நிலுவைத் தொகையை செலுத்த இனியும்  தவறினால் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களில் வரும் 18 ஆம் தேதி முதல் எரிபொருள் வினியோகத்தை நிறுத்தப்போவதாக எச்சரித்துள்ளது. 
 
இதற்கு முன்னர் ரூ.5000 கோடி நிலுவை தொகையை காரணம் காட்டி கொச்சி, மொஹாலி, புனே, ராஞ்சி, பாட்னா, விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களில் எரிபொருள் வினியோகத்தை எண்னெய் நிறுவனங்கள் நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எண்ணெய் நிறுவனங்களின் இந்த அறிவிப்பால் ஏர் இந்தியா மேலும் நெருக்கடியை சந்திக்க கூடும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments