Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி முதல்வருக்கு கொரோனாவா? சோதனை முடிவின் விபரம்

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (20:12 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் கடந்த சில வாரங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் திடீரென அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு கொரோனா தொற்றின் அறிகுறி இருப்பது போல் தென்படுவதால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. மேலும் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அதன் முடிவு வந்துள்ளது. அந்த முடிவின்படி அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு கொரோனா இல்லை என்றும் அவருக்கு பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
கடந்த 2 தினங்களாக லேசான காய்ச்சல் இருந்ததை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா இருக்க வாய்ப்பு உள்ளதாக வெளிவந்த செய்தி தற்போது முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments