Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் மின் தட்டுப்பாடு வராது: மத்திய அமைச்சர் உறுதி!

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (14:01 IST)
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதால் பல மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களான ராஜஸ்தான் உத்தரபிரதேசம் டெல்லி ஆகிய மாநிலங்களில் மின் தட்டுப்பாடு வரும் என்றும் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால் கண்டிப்பாக தமிழகத்தில் மின்தடை ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் மத்திய மின்சார துறை அமைச்சர் ஆர் கே சிங் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பு உள்ளது என்றும் அதனால் நாட்டில் எந்த மாநிலத்தில் மின் தட்டுப்பாடு வராது என்றும் நிலக்கரி பற்றாக்குறை என்பது இதுவரை இல்லை என்றும் இனியும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி இந்தியாவின் பல மாநிலங்களில் விரைவில் மின் தட்டுப்பாடு வரும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments