Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய 2000 நோட்டில் கண்காணிப்பு சிப் உள்ளதா? - ரிசர்வ் வங்கி அதிகாரி விளக்கம்

புதிய 2000 நோட்டில் கண்காணிப்பு சிப் உள்ளதா? - ரிசர்வ் வங்கி அதிகாரி விளக்கம்

புதிய 2000 நோட்டில் கண்காணிப்பு சிப் உள்ளதா? - ரிசர்வ் வங்கி அதிகாரி விளக்கம்
, வியாழன், 10 நவம்பர் 2016 (11:21 IST)
புதிய 2000 நோட்டில் கண்காணிப்பு சிப் இருப்பதாக வெளியான செய்தி குறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.


 

 
பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். அதேபோல், புதிய 100, 500, 2000 நோட்டுகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள், பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளாலம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், புதிய 2000 நோட்டில், கண்ணுக்கு தெரியாத ‘ஜி.பி.எஸ்’ தொழில் நுட்பம் கொண்ட மின்னணு சிப் பொருத்தப்பட்டிருப்பதாகவும், பணத்தை எங்கு ஒளித்து வைத்தாலும், செயற்கைக் கோள் மூலம் கண்டுபிடித்துவிட முடியும் என ஒரு தகவல் நேற்று வெளியாகி அதிர்ச்சியடைய செய்தது.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த ஒரு ரிசர்வ் வங்கி அதிகாரி “ரூ.2000 நோட்டில் வழக்கமான பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான குறியீடுகளே அச்சடிக்கப்பட்டுள்ளன. எந்த வித மின்னனு ‘சிப்’பும் அதனுடன் இணைக்கப்படவில்லை’ என்று கூறினார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற சிரமப்படும் பொதுமக்கள்