Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முடிந்தது கொரோனா 3வது அலை, 4 ஆம் அலைக்கு வாய்ப்பே இல்லை!

முடிந்தது கொரோனா 3வது அலை, 4 ஆம் அலைக்கு வாய்ப்பே இல்லை!
, புதன், 9 மார்ச் 2022 (12:02 IST)
இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை பரவல் முடிவுக்கு வந்துவிட்டதை உறுதியுடன் கூறலாம் என்று மூத்த மருத்துவ நிபுணர் தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 4,575 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,29,75,883 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை பரவல் முடிவுக்கு வந்துவிட்டதை உறுதியுடன் கூறலாம் என்று மூத்த மருத்துவ நிபுணரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவருமான ஜேக்கப் ஜான் கூறியுள்ளார். மேலும் நாட்டில் கொரோனா 4 ஆம் அலை ஏற்படாது என்பதை உறுதியாக நம்பலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக 4 ஆம் அலை வருகிற ஜூன் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமத்துவம் என்றால் என்ன? சென்னை மேயர் ப்ரியா பேச்சு!