Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்னிபாத் நேர்காணலில் ஜாதி, மதம் கேட்கப்படுகிறதா? அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம்

rajnath
, செவ்வாய், 19 ஜூலை 2022 (18:21 IST)
சமீபத்தில் மத்திய அரசு அக்னிபாத் என்ற திட்டத்தை அறிவித்த நிலையில் இந்த திட்டத்திற்கு ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
 
இந்த நிலையில் இந்த திட்டத்தில் சேரும் இளைஞர்களிடம் ஜாதி மற்றும் மத சான்றிதழ்கள் கேட்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன
 
இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் குறிப்பாக ஜாதி மதம் சான்றிதழ்களை கேட்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கூறுபவை அனைத்து பொய்யான தகவல் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார் 
 
மேலும் தேவை ஏற்பட்டால் மட்டுமே ஜாதி சான்றிதழ் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை ராணுவத்தில் எப்போதும் இருந்து வருவதாக இராணுவ அதிகாரிகளும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். சுதந்திர காலத்துக்கு முந்தைய காலத்திலிருந்தே இந்த நடைமுறை இருப்பதாகவும் தற்போதும் அதே நடைமுறையை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி என நினைத்து மகனை கொலை செய்த கொலை செய்த போதைநபர்: கடலூரில் பரபரப்பு