Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்: இன்று பதவியேற்பு

nitiesh kumar
, புதன், 10 ஆகஸ்ட் 2022 (07:40 IST)
பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் மீண்டும் முதல்வர் வேட்பாளராக எதிர்க்கட்சிகளால் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 160 எம்எல்ஏக்களின் ஆதரவு கொடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இன்று மீண்டும் ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் கவர்னரிடம் கோரிக்கை வைப்பார் என்றும் இன்று அவர் முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு ஆதரவு தரும் ஆர்.ஜே.டி. கட்சியின் தேஜஸ்வி துணை முதலமைச்சராக பொறுபேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் முதலமைச்சராக இன்று பதவியேற்க இருப்பதை அட்த்து பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா? இன்றைய நிலவரம்!