Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அணி மாறுகிறாரா நிதிஷ்குமார்.. மாறினால் இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பு..!

Siva
செவ்வாய், 4 ஜூன் 2024 (16:53 IST)
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன

இதனை அடுத்து பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கூட்டணி ஆட்சி தான் அமைக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் சிலர் பாஜக கூட்டணியில் உள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

குறிப்பாக சந்திரபாபு நாயுடு உடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் வெற்றி பெற்ற 16 தொகுதிகள் இந்தியா கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அமைக்க வழிவகை செய்யும்

அதே போல் நிதீஷ் குமாரின் ஜனதா தளம் கட்சி 12 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் அந்த கட்சியும் இந்தியா கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் நிதிஷ்மாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

அது மட்டும் இன்றி சுயேச்சை உள்பட மற்ற சிறிய கட்சிகள் 17 எம்பிகள் இருப்பதால் அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இது மூன்றும் சக்சஸ் ஆகிவிட்டால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திருமாவளவன் கண்டனம்..! குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. கமல்ஹாசன் இரங்கல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்க.! ராகுல் காந்தி..!!

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கட்சி

அடுத்த கட்டுரையில்
Show comments