Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் சரக்கடிச்சா விசாரணையின்றி டிஸ்மிஸ்தான்! – பீகார் முதல்வர் அதிரடி உத்தரவு!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (12:23 IST)
பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் மது அருந்தும் போலீஸாரை டிஸ்மிஸ் செய்ய முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பீகாரில் தொடர்ந்து முதல்வராக பதவி வகித்து வரும் நிதிஷ்குமார் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 2016ம் ஆண்டு முதல் பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது.

மேலும் இதை மீறி வீடுகளில் மதுப்பாட்டில்களை மறைத்து வைத்தால் மொத்த குடும்பத்திற்கும் சிறை தண்டனை போன்ற சட்டங்களும் அமலில் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் காவலர்கள் இடையே பேசிய முதல்வர் நிதிஷ்குமார் “காவலர்கள் மக்களுக்கு முன் மாதிரியாக விளங்க வேண்டும். பூரண மதுவிலக்கை செயல்படுத்த வேண்டிய காவல்துறையினரே மது அருந்துதல் கூடாது. காவல்துறையினர் யாராவது மது அருந்தினால் எந்த அதிகாரத்தில் உள்ளவராக இருந்தாலும் டிஸ்மிஸ் செய்யப்படுவார்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments