Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 ஆண்டுகளில் 5 முறை கூட்டணி மாறிய நிதிஷ்குமார்.. மக்கள் சுதாரிப்பார்களா?

Siva
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (11:38 IST)
கடந்த எட்டு ஆண்டுகளில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்  தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக ஐந்து முறை கூட்டணி மாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று நிதிஷ்குமார் முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் அதாவது 2017 ஆம் ஆண்டு அவர் கூட்டணி கட்சியை முடித்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சர் ஆனார். 
 
இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் குறைவான இடங்களில் வென்றாலும் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சர் ஆனார் 
 
ஆனால் 2022 ஆம் ஆண்டு திடீரென பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கூட்டணியுடன் மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
 
தற்போது மீண்டும் ஆர்.ஜேகே கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜக உடன் மீண்டும் முதலமைச்சர் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  
 
கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து முறை மாறி மாறி கூட்டணி அமைத்துள்ள நிதீஷ் குமாரை இனியும் முதலமைச்சர் ஆக மக்கள் தேர்வு செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

சட்டமன்றத்தில் நீட் தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பயன்.? அரசியல் நாடகம் என இபிஎஸ் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments