Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5ஜி டெக்னாலஜி வேணுமா.. நாங்க தறோம்..! – உலக நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு!

Advertiesment
5ஜி டெக்னாலஜி வேணுமா.. நாங்க தறோம்..! – உலக நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு!
, சனி, 15 அக்டோபர் 2022 (09:22 IST)
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் 5ஜி சேவையை தொடங்க முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி நெட்வொர்க் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன.


இந்த தீபாவளி முதல் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 5ஜி சேவைக்கான தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 5ஜி சேவையை விரிவுப்படுத்த தொலைதொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது குறித்து பேசியுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வந்துவிடும். முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள 5ஜியை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் தயாராக உள்ளோம். இந்தியாவின் சாதனையை நினைத்து பெருமைப்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.

Edited By: Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிரே போனாலும் பாஜகவோடு கூட்டணி இல்ல..!? – நிதிஷ்குமார் உறுதி!