Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை நிச்சயம் தூக்கு; பதறும் 4 குற்றவாளிகள்!

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (14:55 IST)
தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒவ்வொருவரும் மாறி மாறி மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
 
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை 5 பேர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கின் தீர்ப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. 
 
தற்போது உயிரோடு இருக்கும் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த தூக்கு தண்டனை கடந்த சில ஆண்டுகளாக நிறைவேற்றப்பட முடியாமல் உள்ளது
 
குற்றவாளிகளில் ஒருவராக மாறி மாறி நீதிமன்றத்தில் மனு அளித்தும் ஜனாதிபதியிடம் கருணை மனுவும் அளித்தும் வருவதால் அந்த மனுக்களின் விசாரணைகள் முடியும் வரை தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வருகிறது. 
 
இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச்  20ஆம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தர விட்டது. இதனை அடுத்து 4 குற்றவாளிகளுக்கு தூக்கிலிட அனைத்து பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. 
 
குறிப்பாக குற்றவாளிகளின் எடையை கொண்ட பொம்மைகள் கொண்டு தூக்கு தண்டனை ஒத்திகை டெல்லி திகார் சிறையில் நடந்ததாகவும், இந்த ஒத்திகை வெற்றிகரமாக முடிந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
எனவே நிர்பயா பாலியல் குற்றவாளிகளை மார்ச்  20 ஆம் தேதி காலை 5.30-க்கு தூக்கில் போடுவது உறுதி என்று தெரிகிறது. ஆனால், இந்த முறையும் தப்பிக்க தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒவ்வொருவரும் மாறி மாறி மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்