Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தூக்கு உறுதி: நிர்பயா கொலையாளிகளின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (16:14 IST)
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என நீதிமன்றம் கடந்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பு அளித்தது
 
ஆனால் இந்த தீர்ப்பை அமல்படுத்த முடியாமல் குற்றவாளிகள் நால்வரும் மாறி மாறி மனுக்களை தாக்கல் செய்து வந்ததால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது 
 
இந்த நிலையில் கடைசியாக மார்ச் 20ஆம் தேதி 4 குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் தொடர்ச்சியாக குற்றவாளிகள் தரப்பில் இருந்தும், குற்றவாளிகளின் உறவினர்கள் தரப்பில் இருந்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் குற்றவாளிகளின் தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்படும் என்ற நிலை இருந்தது
 
இந்த நிலையில் டெல்லி நீதிமன்றம் சற்றுமுன் அளித்த தீர்ப்பில் நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட எந்தவித தடையுமில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்பயா கொலை குற்றவாளிகளின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் டெல்லி திகார் சிறையில் நாளை காலை 5.30 மணிக்கு நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்