Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஆசை கூட நிறைவேறாமல் தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகள்: அதிர்ச்சி தகவல்

நிர்பயா
Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (07:24 IST)
கடைசி ஆசை கூட நிறைவேறாமல் தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகள்
டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் சாகும் வரை தூக்கில் இடப்பட்டதாகவும் அவர்களது மரணம் உறுதி செய்யப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்த நிலையில் குற்றவாளிகளை காப்பாற்ற கடைசி வரை அவரது வழக்கறிஞர் சட்டப் போராட்டம் நடத்தினார். இன்று அதிகாலை 2 மணிக்கு கூட ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து கடைசியாக, குற்றவாளிகளின் கடைசி ஆசையாக அவர்களது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த கோரிக்கைக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் குற்றவாளிகள் அவர்களுடைய உறவினர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை
 
இந்த நிலையில் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு குற்றவாளிகளுக்கு தண்ணீர் மற்றும் டீ வழங்கப்பட்டதாகவும் அதனை ஏற்க குற்றவாளிகள் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. கடைசி ஆசை கூட நிறைவேறாமல் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments