Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜஸ்தான் மாநிலத்திலும் இரவுநேர ஊரடங்கு: திரையரங்குகளை மூடவும் உத்தரவு

ராஜஸ்தான் மாநிலத்திலும் இரவுநேர ஊரடங்கு: திரையரங்குகளை மூடவும் உத்தரவு
, வியாழன், 15 ஏப்ரல் 2021 (09:16 IST)
கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது நாளை முதல் ராஜஸ்தான் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது
 
நாளை முதல் மாலை 6 முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் மாலை 4 மணியுடன் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் அனைவரும் மாலை 6 மணிக்குள் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள், நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி இல்லை என்றும் ராஜஸ்தான் அரசு கூறியுள்ளது.
 
ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜஸ்தான் மாநில அரசு எச்சரித்துள்ளது. நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அதன் பின்னர் நிலையமை அனுசரித்து ஊரடங்கு நீடிக்குமா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்; கடல் மீன்கள் தட்டுப்பாடு! பண்ணை மீன்களுக்கு மவுசு!