Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிபா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு விடுமுறை

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (10:03 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் ‘நிபா’ வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நிபா  வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கேரளாவில் உள்ள பாலுசேரி தாலுகா மருத்துவமனையின் டாக்டர்கள், நர்ஸ்கள் ஆகியோர்களை உடனடியாக விடுப்பில் செல்ல கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
 
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதால் காரணமாக இதுவரை 16 பேர் பலியாகியுள்ள நிலையில் கோழிக்கோடு மாவட்டம் பாலுசேரி தாலுகா மருத்துவமனையில் ‘நிபா’ வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதன் பின்னர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இவர்கள் மாற்றப்பட்டனர். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி இருவரும்  உயிரிழந்தனர்.
 
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலுசேரி மருத்துவமனையில் இந்த இரண்டு நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்த 4 டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட ஊழியர்களை  1 வாரத்துக்கு விடுப்பில் செல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலுக்கு எதிர்ப்பு; தாயை கொல்ல காதலனை ஏவிய 15 வயது சிறுமி!

பைக்கில் டிரிபிள்ஸ் வந்த இளம்பெண்கள்.. கன்னத்தில் அறைந்த காவல்துறை அதிகாரியால் பரபரப்பு..!

ஆகஸ்ட் 15 முதல் சுற்றுப்பயணம், ரோட் ஷோ.. களத்தில் இறங்குகிறார் தவெக விஜய்..!

சமூகநீதி நாயகன் வி.பி.சிங் ஆன்மா.. தமிழக ஆட்சியாளர்கள் கண்களை திறக்கட்டும்?! - யாரை அட்டாக் செய்கிறார் அன்புமணி?

பொய் புளுகி மீடியாக்களை நம்பாதீங்க.. ஈரான் அணுசக்தி தளங்களை அழிச்சாச்சு! - ட்ரம்ப் திட்டவட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments