Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்புக்கு ரூ. 120 கோடி அபராதம்!

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்புக்கு ரூ. 120 கோடி அபராதம்!
, சனி, 13 ஆகஸ்ட் 2016 (10:08 IST)
டெல்லியில் யமுனை நதிக்கரையில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் உலக கலாச்சார விழா நடைபெற்றதை அடுத்து, ரூ. 120 அபராதம் விதிக்க பசுமை தீர்பாயத்தின் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
 

 
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பில் யமுனை ஆற்றங்கரையில் நடைபெற்ற உலக கலாச்சார திருவிழா நடத்தினர். விழாவின்போது, யமுனை நதிக்கரை படுக்கையை சேதப்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.
 
உலக கலாச்சார திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கில், சுற்றுச்சூழல் சேதத்திற்கான இழப்பீடாக ரூ.5 கோடி செலுத்த வாழும் கலை அமைப்புக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிடப்பட்டது.
 
முன்னதாக. ரூ.25 லட்சம் மட்டும் முன்பணமாக செலுத்தி, வாழும் கலை அமைப்பு, திருவிழாவை நடத்தியது. மீதிப்பணமான ரூ.4.75 கோடியை கடந்த ஜூன் மாதம் செலுத்தியது.
 
இந்நிலையில், யமுனை ஆற்றங்கரையில் நடைபெற்ற திருவிழாவின் போது ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய நிபுணர் குழு அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இக்குழு தனது அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் அளித்தது.
 
அதில், யமுனை நதிப்படுகை மோசமான வகையில் சேதப்படுத்தப்பட்டதுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வாழும் கலை அமைப்பிற்கு ரூ.120 கோடி அபராதம் விதிக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக, வாழும் கலை அமைப்பு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக துணைப் பொதுச்செயலர் சற்குண பாண்டியன் காலமானார்