Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக துணைப் பொதுச்செயலர் சற்குண பாண்டியன் காலமானார்

திமுக துணைப் பொதுச்செயலர் சற்குண பாண்டியன் காலமானார்
, சனி, 13 ஆகஸ்ட் 2016 (10:04 IST)
திமுக துணைப் பொதுச்செயலர் சற்குண பாண்டியன் இன்று சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். முன்னள் அமைச்சரான இவர் திமுக துணைப் பொதுசெயலர்களில் ஒருவர் ஆவார்.


 
 
கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கபட்டு வந்த சற்குண பாண்டியன் தொடர்ந்து சற்குணபாண்டியன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் காலமானார். அவரது உடல் ராயபுரம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
 
1989, 1996-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1996-இல் சமூகநலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது திமுக துணைப் பொதுச்செயலராக பதவி வகித்து வந்தார்.
 
கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டது இவருடைய மருமகள் சிம்லா முத்துசோழன் ஆவார்.
 
திமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து 1989, 1996 ஆண்டு தேர்தலில் சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாக சற்குண பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரசவ கட்டணத்துக்கு பிறந்த குழந்தையையே விற்ற பெண்!