Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவே முடியல.. அதுக்குள்ள இன்னொரு நோயா? – அகமதாபாத்தில் மர்ம நோய்!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (10:42 IST)
இந்தியாவில் கொரோனாவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அகமதாபாத்தில் புதிய நோய் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வருகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பல மாதங்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது தடுப்பூசி செலுத்தும் நிலை வரை வந்துள்ளது. ஒருவழியாக கொரோனாவிலிருந்து தப்பி விடலாம் என மக்கள் ஆசுவாசம் அடைந்த நிலையில் புதிய நோய் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தில் திடீரென பரவி வரும் புதிய மர்ம நோயால் இதுவரை 44 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நோய்க்கான காரணம் என்ன என மருத்துவர்கள் ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments