Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்கார்டு வாங்க புதிய விதிகள்: டிசம்பர் 1 முதல் அமல் என அறிவிப்பு..!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (11:07 IST)
சிம்கார்டு வாங்க புதிய விதிகள் டிசம்பர் 1 முதல் அமல் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி சிம்கார்டு வாங்குபவர்களுக்கு கேஒய்சி  விவரங்கள் அளிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய சிம்கார்டு பயனர்களுக்கு மட்டுமின்றி ஏற்கனவே உள்ள சிம் கார்டுக்கு பதில் புதிய கார்டு வாங்கினாலும் இந்த நடைமுறை பொருந்தும்.  

ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் சிம் கார்டுகள் விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்காக மொத்தமாக சிம் கார்டுகளை வாங்கினால், நிறுவனத்தின் பொறுப்பாளர் உரிய படிவத்தில் ஒப்புதல் கையெழுத்திட்டால் மட்டுமே மொத்தமாக சிம்கார்டுகள் கிடைக்கும்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு நபர் தனது அடையாள அட்டையை பயன்படுத்தி 9 சிம் கார்டுகளை வரை வாங்கலாம் என்ற நடைமுறையில் மாற்றம் இல்லை.

 சிம் கார்டு விற்பனை செய்வோரிடம்,  தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிய முறையில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.  

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களிடம் இருந்து சிம் கார்டுகளை வாங்கி விற்பனை செய்யும் முகவர்கள்,  விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் தொடர்பான விவரங்களை முழுமையாக பெற வேண்டும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments