Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.360 கோடியில் புதிய சாலை: நள்ளிரவில் ஆய்வு செய்த பிரதமர் மோடி!

Sinoj
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (15:30 IST)
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று நள்ளிரவில் பிரதமர் மோடி , அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்துடன்  ரூ.360 கோடியில் கட்டப்பட்டுள்ள  ஷிவ்பூர்- புல்வாரியா  லஹார்தாரா சாலையை ஆய்வு செய்தார்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைக்கவும், வேறுசில  நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பிரதமர் மோடி நேற்றிரவு  வாரணாசி வந்தார்.
 
நேற்று நள்ளிரவில் பிரதமர் மோடி , அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்துடன்  ரூ.360 கோடியில் கட்டப்பட்டுள்ள  ஷிவ்பூர்- புல்வாரியா  லஹார்தாரா சாலையை ஆய்வு செய்தார்.
 
இந்தச் சாலை பணாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து, விமான நிலையம் வரை 45 நிமிடங்களில்( முன்பு 75 நிமிடங்கள்) பயணிக்கலாம்.  இதன் மூலம் போக்குவரத்து நெரிசலும் குறைந்துள்ளது. அதேபோல் லஹார்தாராவில் இருந்து கசாஹ்ரிக்கு 15 நிமிடங்களில்( முன்பு 30  நிமிடங்கள்)  செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ''காசிக்குச் சென்றதும்  ஷிவ்பூர்- புல்வாரியா- லஹார்தாரா சாலையை ஆய்வு மேற்கொண்டேன். சமீபத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம்,  நகரின் தெற்குப் பதிதியிலுள்ள மக்களுக்கு உதவும்'' என்று தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments