Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.5,000 மேல் டெபாஸிட் செய்ய புதிய கெடுபிடி!!

ரூ.5,000 மேல் டெபாஸிட் செய்ய புதிய கெடுபிடி!!
, செவ்வாய், 20 டிசம்பர் 2016 (10:26 IST)
இனி ரூ.5,000-த்திற்கு மேலான தொகைக்கான பழைய நோட்டுகள் டெபாசிட்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.


 
 
பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு இம்மாதம் 30-ம் தேதி காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், கெடு காலம் முடிவடைய 10 நாள்களே உள்ள நிலையில் வங்கிக் கணக்கில் ரூ.5,000 மேல் டெபாசிட் செய்ய முடியாது என்ற புதிய உத்தரவை ஆர்பிஐ பிறப்பித்துள்ளது.
 
வங்கிக் கணக்கில் ரூ.5000-த்திற்கும் மேலாக டெபாசிட் செய்வது ஒருமுறை டெபாசிட்டாக இருப்பது அவசியம். மேலும், வங்கியின் இரண்டு அதிகாரிகளிடத்தில் திருப்திகரமான விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் சரியாக இல்லையெனில் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
 
அரசிடம் வருமானத்தை தாங்களாகவே தெரிவிக்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின் கீழ் டெபாசிட் செய்யப்படும் தொகைகளுக்கு இந்தக் கட்டுப்பாடு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுலை பார்த்ததும் கண் திறந்து புன்னகைத்த கருணாநிதி!