Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிப்ட் டெக்னாலஜியில் புதிய பாம்பன் பாலம்: வீடியோ வெளியிட்டு அசத்திய அமைச்சர்

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (08:37 IST)
இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று. கப்பல் வரும்போது பாலம் தூக்கப்படும் காட்சியை காணவே அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருவார்கள். கடந்த 1911ஆம் ஆண்டு தொடங்கி 1915ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாடல் நூறு ஆண்டை கடந்துவிட்டது.

இந்த நிலையில் இந்த பாலத்தில் தற்போது பழுது ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  நூற்றாண்டை கடந்து விட்ட இந்த பாலத்திற்கு பதிலாக, 250 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

இங்கு அமையவிருக்கும் புதிய பாலம் லிப்ட் டெக்னாலஜியில் கட்டப்படவுள்ளது. கப்பல் வரும்போது பாலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் லிப்ட் போல் தூக்கப்படும். கப்பல் சென்ற பின்னர் மீண்டும் கீழிறக்கப்பட்டு ரயில் பாதையாக பயன்படுத்தப்படும்.

இந்த புதிய பாலத்தின் மாதிரி வீடியோவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தா வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ஜாமீன் ரத்து... சிறார் நீதி வாரியம் அதிரடி..!

வங்கியில் திருட முயன்ற குற்றவாளியைப் பிடித்த போலீஸாருக்கு SP பாராட்டு!

300 ரூபா இருந்தா போதும்.. ஏற்காட்டில் சூப்பர் சுற்றுலா போகலாம்! – போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு!

திடீரென 800 ரூபாய்க்கு மேல் குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: சென்னை என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments