Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 குழந்தைகள் பெற்ற எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் பேச்சு..!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (20:52 IST)
மூன்று குழந்தைகள் மற்றும் அதற்கு மேல் குழந்தைகளை பெற்ற எம்பிக்களை பகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் அஜித் பவார் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாகவும் இதற்கு நாமே பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்டிருக்கும் எம்பி மற்றும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஒரு குழந்தை மற்றும் இரண்டு குழந்தை பிறந்தவர்களுக்கு மட்டுமே அனைத்து பதவிகளையும் கொடுக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டுமின்றி சமூக வலைதளங்களில் அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments