Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்கத்து வீட்டுக்காரர்களை தலைகீழாக தொங்கவிட்டு சிறுநீர் கழித்த கொடூரம்!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (13:10 IST)
மராட்டிய  மாநிலத்தில்  இளைஞர்கள் சிலர் பக்கத்து வீட்டுக் காரர்கள் 4 பேரை தலைகீழாகத் தொடங்கவிட்டு அடித்துத் துன்புறுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்த கொடூரம் நடந்துள்ளது.
 
மராட்டிய  மாநிலத்தில் முதல்வர்  ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா( எதிர்ப்பு அணி) பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு இளைஞர்கள் சிலர் பக்கத்து வீட்டுக் காரர்கள் 4 பேரை தலைகீழாகத் தொடங்கவிட்டு அடித்துத் துன்புறுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்த கொடூரம் நடந்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் சமீபத்தில் ஒரு வாலிபர் தலைகீழாகக் கட்சி தொங்கவிட்ட்டிருந்த வீடியோ  இணையதளங்களில் வெளியாகி பரவியது. இதுபற்றி போலீஸார் விசாரணை செய்து வந்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாலிபர் போலீஸார் புகார் அளித்திருருந்தார். அதில், ‘’நாங்கள் சிறுபான்மை சமூகத்தினர் என்பதால்   என் பக்கத்து வீட்டுக்காரக்ள், என்னுடன் சேர்ந்து மேலும் 3 சிறுவர்களை அடித்துத் துன்புறுத்தி, எங்கள் மீது சிறுநீர் கழித்தனர்’’ என்று கூறி அவர்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர்.  அவர்கள், பப்பு பார்கே, ராஜூ போக்கே, கலண்டே மற்றும் பாட்டீல் ஆவர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர். இதில் ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருவதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments