Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீடா அம்பானி.. 100% வாக்குகளுடன் போட்டியே இல்லை..!

Siva
வியாழன், 25 ஜூலை 2024 (07:03 IST)
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி மீண்டும் போட்டியின்றி 100 சதவீத வாக்குகளுடன் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

33வது ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா உள்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 142 வது கூட்டம் நடைபெற்ற நிலையில் இதில் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி கலந்து கொண்டார்.

அப்போது இந்தியாவின் உறுப்பினராக அவர் போட்டியின்றி நூறு சதவீத வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தேர்வு செய்த பின் நீடா அம்பானி செய்தியாளர்களிடம் பேசிய போது ’சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு பெருமை தான். இந்த கமிட்டியில் உள்ளவர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மகிழ்ச்சியை, பெருமையான தருணத்தை நான் ஒவ்வொரு இந்தியருடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தியாவிலும் உலகெங்கிலும் ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை எடுக்கப் போகிறேன்’ என்று தெரிவித்தார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments