Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் முதுகலை தேர்வை ஒத்தி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம்

neet
, வெள்ளி, 13 மே 2022 (12:50 IST)
முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் முதுகலை நீட் தேர்வை ஒத்தி வைக்க உத்தரவிட முடியாது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்தியா முழுவதும் முதுகலை நீட் தேர்வு மே 21-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது
 
இது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று நடந்த விசாரணையில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது
 
மேலும் திட்டமிட்டபடி  மே 21ஆம் தேதி முதுகலை நீட் தேர்வு நடைபெறும் என்றும் சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங். இருந்து நீக்கப்பட்ட முக்கிய புள்ளி - அரசியல் பரபரப்பு!