Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''நீட் கோச்சிங் சென்டரின் மோசடி'' - ராஜஸ்தான் மாநில அமைச்சர் விமர்சனம்

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (21:00 IST)
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக தமிழகத்தில் ஆளும்கட்சியான திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 

இந்த நீட் தேர்வினால் பல மாணவர்கள் தற்கொலை செய்துள்ள நிலையில், இந்த நீட்டை கண்டித்து, சமீபத்தில்  திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், அந்த மாநில உள்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் இன்று  நீட் தேர்வு பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

வெற்றி பெற்றவர்களை வைத்து விளம்பரம் செய்யும் நீட் கோச்சிங் நிறுவனங்கள் மற்ற மாணவர்களின் நிலையைப் பற்றி கூறாமல் உள்ளது. இது ஒரு மோசடியாகும்…. ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் ராஜஸ்தான் மா  நிலம் கோட்டா நகரத்தில் படித்து வருகின்றனர். இவர்கள் 20 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் ஒரு நிறுவனத்தில் 20,30 பேரை மட்டும்தான் வைத்து விளம்பரம் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments