Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடெங்கும், வீதியெங்கும் தேசியக் கொடி! – ரூ.500 கோடிக்கு விற்பனை!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (09:58 IST)
நாட்டின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி தேசிய கொடிகள் மொத்தமாக ரூ.500 கோடிக்கும் மேல் விற்பனையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்டு 15 அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அனைவரது இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

தபால் அலுவலகங்கள் மற்றும் கடைகளிலும் தேசிய கொடிகள் பரபரப்பாக விற்பனையாகியது. இதுபோக தன்னார்வல அமைப்புகள் பலவும் வீடு வீடாக சென்று தேசிய கொடிகளை வழங்கினர்.

தற்போது அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு அளித்துள்ள தகவலின்படி, பிரதமர் மோடியின் “அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி” பரப்புரையால் சுமார் 30 கோடி தேசியக்கொடிகள் விற்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் ரூ.500 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments