Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாகாலாந்து பதற்றம்… ராணுவத்தினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு!

நாகாலாந்து பதற்றம்… ராணுவத்தினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு!
, திங்கள், 6 டிசம்பர் 2021 (12:44 IST)
நாகாலாந்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ராணுவத்தினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாகலாந்து மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர் என்பதும் இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாகலாந்து மாநிலத்தில் உள்ள மோன் என்ற நகரில் ஒரு சிலர் சந்தேகத்திற்கிடமாக இருந்த நிலையில் அவர்கள் பயங்கரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். 

ஆனால் துப்பாக்கி சூடு முடிந்த பிறகு பார்த்தபோது அவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும், ராணுவ வாகனங்கள் தீ வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 

இந்நிலையில் பதற்றத்தைக் குறைக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணுவத்தினர் மீது பொதுமக்களை கொலை செய்யும் நோக்கத்துடன் துப்பாக்கி சூடு நடத்தியதாக அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீஸ் விசாரணைக்கு சென்ற மாணவர் மரணம்! – ட்ரெண்டாகும் #JusticeForManikandan