Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொந்த சகோதரியை வன்கொடுமை செய்த சகோதரன்! – கேரளாவில் அதிர்ச்சி!

சொந்த சகோதரியை வன்கொடுமை செய்த சகோதரன்! – கேரளாவில் அதிர்ச்சி!
, வியாழன், 18 நவம்பர் 2021 (11:24 IST)
கேரளாவில் பணிபுரிந்து நாகலாந்தை சேர்ந்த நபர் சொந்த சகோதரியையே வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த போங்குவாட் என்பவர் கேரளாவில் நித்திரவிளை அருகே வீடு எடுத்து தங்கிக் கொண்டு அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் நாகலாந்தில் உள்ளனர்.

இந்நிலையில் இவரது 17 வயதான சகோதரி இவரை காண நித்தியவிளை வந்துள்ளார். அங்கு அவரது அறையிலேயே அவரது சகோதரியும் தங்கியுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை போங்குவாட் அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமான நிலையில் அவரை சோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

உடல்நிலை சரியில்லையென்று அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆனால் மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் மருத்துவர்கள் விசாரித்ததில் நடந்தவற்றை சிறுமி கூறியுள்ளார். உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. விரைந்து வந்த அவர்கள் போங்குவாட் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். சொந்த தங்கையை சகோதரனே வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காற்றழுத்த பகுதி காற்றழுத்த மண்டலமாக மாறியது – இன்று இரவே கரையை நெருங்கும்!