Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முத்தூட் பைனான்ஸ் இயக்குநர் தாக்குதல் ....கேரளாவில் பரபரப்பு

முத்தூட் பைனான்ஸ் இயக்குநர் தாக்குதல் ....கேரளாவில் பரபரப்பு
, செவ்வாய், 7 ஜனவரி 2020 (20:54 IST)
கொச்சியைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் முத்தூட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டரை சிலர் தாக்க முற்பட்ட சம்பபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை தலைநகராகக் கொண்டு இயங்கிவரும் நகை அடமான நிறுவனம் முத்தூட் பைனான்ஸ். இந்த நிறுவனத்தில் வருவாய் இழப்பீடு காரணமாக 43 கிளைகளை மூடுவதாகவும், 163 பேருக்கு பணி இழப்பு ஏற்படும் என நிறுவனம் அறிவித்திருந்தது.
 
இதற்கு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தற்போது, பணியாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொச்சியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு காரில் சென்ற முயன்ற நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டரை கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில்,அவர் பலத்த காயம் அடைந்தார்.  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகத்துக்கு பூசும் பவுடரை சாப்பிடும் இளம்பெண்... மருத்துவர் அதிர்ச்சி