Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு பேர்தான் பாதுகாப்பா? பினராயி விஜயனை கேள்விகேட்கும் முரளிதர ராவ்!

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (20:05 IST)
கேரளாவுக்கு சென்ற கர்நாடக முதல்வரை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்த வீடியோவை பதிவிட்டு பினராயி விஜயனை கேள்வி எழுப்பியுள்ளார் முரளிதர ராவ்.

கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் வழிபாட்டுக்கு சென்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடி வந்த போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்தனர். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடியூரப்பாவின் காரை மறித்த நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா காரை போராட்டக்காரர்கள் வழிமறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை கேரள பாஜக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதை ரீ ட்வீட் செய்துள்ள பாஜக தேசிய பொது செயலாளர் முரளிதர ராவ் “கம்யூனிசத்தின் இரட்டை மனநிலை வெளிப்பட்டுவிட்டது. எதிர்கட்சியாக இருந்தால் ஜனநாயகம் குறித்து பேசுவார்கள். அதிகாரத்தில் இருந்தால் வன்முறையாளர்களை கொண்டு செயல்படுவார்கள். கர்நாடக முதல்வர் கம்யூனிச குண்டர்களால் தாக்கப்பட்டது ஜனநாயகத்தின் கோர முகத்தை காட்டுவதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் எடியூரப்பாவுக்கு சரியான பாதுகாப்பு தராதது ஏன்? என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனை கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments