Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச இணையத்திற்கு அடிமையாகும் மும்பை பள்ளி மாணவர்கள்

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (14:41 IST)
மும்பையைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் ஆபாச வீடியோக்களை செல்போன்கள் மூலம் பார்க்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
இன்றைய நவீன உலகத்தில் செல்போன் இல்லாத மனிதர்களே இல்லை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் விஷயமே இருக்கிறது. நல்ல வழியில் உபயோகித்தால் அதில் இருந்து பல நல்ல விஷயங்களை கத்துக்கொள்ளலாம், மாறாக தீய வழியில் பயன்படுத்தினால் அது தனி மனித ஒழுக்கத்தை கெடுத்துவிடும்.
 
இப்பொழுது இருக்கும் சிறுவர்கள் பலர் செல்போனுடனே தான் சுற்றுகிறார்கள். அதில் ஆபாச வளைதளத்தினுல் சென்று ஆபாச படங்களை பார்க்கின்றனர். இது சொல்வதற்கு கஷ்டமாக இருந்தாலும் இதுவே உண்மை. இதை தாங்கள் பார்ப்பதோடு பள்ளிக்கு செல்போனை எடுத்துசென்று மற்ற மாணவர்களையும் பார்க்க வைக்கின்றனர். இதனால் பல பள்ளி மாணவர்கள் ஆபாச இணையதளத்திற்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை வீணடித்துக்கொள்கிறார்கள். நாளுக்கு நாள் ஆபாச வளைதளங்களை உபயோகிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகத்துக்கொண்டே வருவதாக மும்பை சைபர் க்ரைம் தெரிவித்துள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனைத் தடுக்க பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு செல்போன்களைத் தராமல் இருக்க வேண்டும், மேலும் அவர்களின் அன்றாட நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments