Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பலாத்கார வழக்கில் மணமகன் திருமண மேடையில் கைது!

பலாத்கார வழக்கில் மணமகன் திருமண மேடையில் கைது!

பலாத்கார வழக்கில் மணமகன் திருமண மேடையில் கைது!
, வெள்ளி, 5 மே 2017 (17:28 IST)
மும்பையில் திருமணமாக சில நிமிடங்களே இருந்த நிலையில் திருமண மேடையில் வைத்து மணமகன் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.


 
 
22 வயதான அந்த இளைஞன் தனக்கு அக்கா முறையான 24 வயதான ஒரு இளம்பெண்ணுடன் சிறுவயதில் இருந்தே பழகி வந்துள்ளான். இவர்கள் பழக்கம் நாளடவில் காதலாக மாற அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி பலமுறை உடலுறவு கொண்டுள்ளான் அந்த இளைஞன்.
 
சம்பந்தப்பட்ட அவர்களின் சமுதாயத்தில் அக்கா, தங்கை உறவு முறை உள்ளவர்களுடன் திருமணம் செய்துகொள்ளலாம் என்பதால் அந்த பெண்ணும் அவரின் திருமண வாக்குறுதியை நம்பி அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
 
இந்நிலையில் அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற ஏற்பாடு செயப்பட்டிருந்தது. இதனை அறிந்த அந்த பாதிக்கப்பட்ட இளம்பெண் அந்த இளைஞர் மீது பலாத்கார புகார் ஒன்றை மகளிர் காவல் நிலையத்தில் அளித்தார். இதனை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் திருமணம் நடைபெற இருந்த சில நிமிடங்களில் மணமகனை மணமேடையில் வைத்து கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவிடம் கொந்தளித்த திவாகரன் தரப்பு: விவேக் வரவே கூடாது!