Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயின் காலணியால் பரிதாபமாக உயிரிழந்த 6 மாத குழந்தை

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (11:44 IST)
உயரமான காலணி அணிந்து சென்று, தாய் கால் தவறி தன் கையிலிருந்து 6 மாத குழந்தையை கீழே விட்டதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஃபெமிடா ஷாயிக் என்ற பெண் தனது 6 மாத கைக்குழந்தையுடன் திருமணத்திற்கு சென்றுள்ளார். ஹை ஹீல்ஸ் காலணியை அணிந்திருந்ததால் ஃபெமிடா நடக்க சிரமப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் ஃபெமிடா, தனது குழந்தையுடன் மண்டபத்தின் 2 வது மாடியில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது கால் தவறியதால், கையிலிருந்த குழந்தை கீழே விழுந்துள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குழந்தையின் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments