Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் பயங்கர தீ விபத்து: 14 பேர் உடல் கருகி மரணம்

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (06:47 IST)
மும்பையில் உள்ள கமலா மில்ஸ் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் உயிருக்கு போராடி வருவதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த தீவிபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்6 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் இருப்பினும் இதுகுறித்து முழுமையாக விசாரணை செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments