Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையை மூழ்கடித்த மழை – வெளியேறிய மக்கள்

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (16:31 IST)
கடந்த இரண்டு வாரங்களாக மும்பையில் பெய்து வரும் கனமழையால் நகரமே மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மக்கள் பலர் பலவிதமான இயற்கை விபத்துகளால் உயிரிழந்து வருகின்றனர்.

மும்பையில் பெய்து வரும் கனமழையால் இறந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. வீதிகளில் பாய்ந்த வெள்ளம் அங்கு நின்ற வாகனங்களை அள்ளிப்போட்டு கொண்டு சுரங்கபாதையில் சென்று நிரம்பிவிட்டது. மீட்பு பணிகளில் தீயணைப்பு துறை, காவல் துறை, சமூக ஆர்வலர்கள் என பலர் பங்கெடுத்துள்ளனர். இன்று காலை புனேவில் மழை காரணமாக கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு மகாராஷ்டிர அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments