Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு

Mulayam singh
, வியாழன், 6 அக்டோபர் 2022 (18:31 IST)
முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியீடு இருப்பதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
 
இந்த நிலையில் சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை மையத்தில் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் அவரை கண்காணித்து வருவதாகவும் அறிவித்துள்ளது
 
இந்த தகவல் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி நடத்தையில் சந்தேகம்: 8 வயது குழந்தையை கொலை செய்த தந்தை கைது!