Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜிமானா செய்த முகேஷ் அம்பானி; ஜியோ தலைவரான ஆகாஷ் அம்பானி!!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (17:06 IST)
ஜியோ நிறுவன தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். 

 
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டிஜிட்டல் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பதவியை முகேஷ் அம்பானி ஜூன் 27 ராஜினாமா செய்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குநர்கள் குழு  கூட்டம் 27 ஜூன், 2022 அன்று நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 
முகேஷ் அம்பானி ராஜினாமா செய்ததால், நிர்வாகமற்ற இயக்குநரும் அம்பானியின் மகனுமான ஆகாஷ் அம்பானியை வாரியத்தின் தலைவராக நியமித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பங்கஜ் மோகன் பவார் ஜூன் 27 முதல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்கிறார்.
 
முன்னதாக 2021 ஆம் ஆண்டு, தலைமைத்துவ மாற்றத்தின் ஒரு பகுதியாக தனது குழந்தைகள் அதிக பொறுப்புகளை எடுத்துக்கொள்வதாக முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். ரிலையன்ஸின் நிறுவனரான தனது தந்தை திருபாய் அம்பானியின் அதே தீப்பொறியையும் ஆற்றலையும் தனது குழந்தைகளிடமும் காண முடியும் என்று அவர் கூறினார்.
 
2019-ல் நிறுவப்பட்ட ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், RIL க்கு முழு உரிமையாளராக உள்ளது. இது ஒரு இந்திய தொழில்நுட்ப நிறுவனமாகும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இதுவரை 250 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது.. கேசி வீரமணி குற்றச்சாட்டு..!

ஸ்ரீவைகுண்டத்தில் 110 மில்லி மீட்டர் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கிடைப்பது எப்போது? தேசிய தேர்வு முகமை தகவல்..!

டீசல் பேருந்துகள் CNG பேருந்துகளாக மாற்றம்! - போக்குவரத்துக் கழகம் எடுத்த முடிவு!

மகன் பதவியை பறித்து அப்பாவுக்கு பதவி கொடுத்த மாயாவதி.. உபியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments