Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தாய்! - சிறுமி அளித்த பகீர் புகார்!

Prasanth K
ஞாயிறு, 29 ஜூன் 2025 (09:49 IST)

கர்நாடகாவில் பெற்றத் தாயே மகளை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்ததாக வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநிலம் பெங்களூரில் 38 வயது பெண்மணி ஒருவர் கணவனை பிரிந்து தனது 14 வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அந்த மகள் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

 

இந்நிலையில் சிறுமியின் பள்ளியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அதில் மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த சிறுமி அளித்த புகார் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தனது தாயே தன்னை வன்கொடுமை செய்து வருவதாக அந்த சிறுமி புகார் அளித்துள்ளார்.

 

இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் போலீஸில் புகார் அளித்ததை அடுத்து சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அந்த பெண், தனது மகள் திருமணத்திற்கு பிறகு கணவனுடன் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்லி தந்ததாக கூறியுள்ளார். எனினும் சிறுமியின் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் அவரது தாய் கைது செய்யபட்டுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா சட்டக்கல்லூரி பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி..!

ஒடிசா ரத யாத்திரை நெரிசலில் சிக்கி மூவர் பலி; ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் விபரீதம்..!

தமிழ்நாடு அரசின் மகளிா் உரிமைத் தொகை .. 3 விதிமுறைகள் தளர்வு... பெண்கள் மகிழ்ச்சி..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவியின் மெடிக்கல் ரிப்போர்ட்.. மார்பில் காயம் என அதிர்ச்சி தகவல்..!

8 தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

அடுத்த கட்டுரையில்