Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடு முழுவதும் 2.75 லட்சம் செல்போன் எண்கள் முடக்கம்: டிராய் அறிவிப்பு..!

cellphone

Siva

, புதன், 4 செப்டம்பர் 2024 (07:52 IST)
நாடு முழுவதும் இரண்டு புள்ளி 75 லட்சம் செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக ராய் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

செல்போன் வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற எஸ்எம்எஸ் அனுப்புவது, விளம்பர கால் செய்வது உள்ளிட்ட பல்வேறு புகார் அடிப்படையில் டிராய் நிறுவனம் இது குறித்த செல்போன் எண்களை ஆய்வு செய்தது மோசடி அழைப்புகள், அனுமதி அற்ற விளம்பரங்கள் அனுப்புவது தொடர்பான புகாரின் அடிப்படையில் நாடு முழுவதும் கடந்த ஆறு மாதங்களில் 2.75 லட்சம் செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் புகாருக்குள்ளான 50 நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் வாடிக்கையாளர்கள் மோசடி அழைப்புகள் மற்றும் அனுமதி ஏற்ற விளம்பரங்களால் பெரும் பாதிப்பு அடைகின்றனர் என்பதும் தினமும் 10 முதல் 15 தேவையற்ற கால்கள் வருவது செல்போன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பதாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான புகார்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகாரின் அடிப்படையில் தான் டிராய் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவெக முதல் மாநாட்டிற்கு சிக்கல்: சட்ட நிபுணர்களுடன் விஜய் முக்கிய ஆலோசனை..!