Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நகைக்கடையில் புகுந்து 10 ஆயிரம் ரூபாய் கட்டை தூக்கிச் சென்ற குரங்கு- வீடியோ

நகைக்கடையில் புகுந்து 10 ஆயிரம் ரூபாய் கட்டை தூக்கிச் சென்ற குரங்கு- வீடியோ
, திங்கள், 6 ஜூன் 2016 (15:48 IST)
நகைக்கடை ஒன்றில் புகுந்த குரங்கு ஒன்று 10 ஆயிரம் ரூபாய் கட்டை எடுத்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு நகைக்கடை ஒன்றில் குரங்கு ஒன்று புகுந்தது. பின்னர் அங்குமிங்கும் தாவிர குரங்கி இறுதியாக பணம் வைத்திருந்த மேஜை  அருகே இருந்த தாவியது. திடீரென தன் முன் இருந்த மேஜை டிராயை திறந்தது. பின் அதில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடுகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர் ஒருவர் கொய்யாப் பழத்தை குரங்கிடம் காட்டி பிடிக்க முயல்கிறார். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் குரங்கு பிடிபடாமல் தப்பி ஓடி விடுகிறது. இந்த காட்சி அங்கிருந்த வீடியோ கேமராவில் பதிவாகியது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரா ரா; ரேப்பு ஒஸ்தா: பாலியல் ஆசையில் சுற்றும் பெண் பேய்கள்!