Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீவிரவாதிகளிடம் இருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

தீவிரவாதிகளிடம் இருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
, செவ்வாய், 22 நவம்பர் 2016 (13:10 IST)
வடக்கு காஷ்மீரின் பந்திபோராவில் நடைபெற்ற என்கவுண்டரில் இரு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அவர்களிடமிருந்து நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.


 



பந்திபோரா பகுதியில் உள்ள ஹாஜின் கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத
 
னையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையை தொடங்கினர். அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இருதரப்பு இடையே சண்டை தொடங்கியது. பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்றும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுதான் நாராயணசாமிக்கு முதல் முறை.....