’மோடி ’பெட்ரோல் விலையை உயர்த்தப்போகிறார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (21:39 IST)
நம் நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் உற்சாகத்துடன்  நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தீர்ப்பை தேர்தல் கருவி மூலம் எழுதிவருகின்றனர். வரும் மே 23 ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 
பிரதமர் மோடி தன்னைப்பற்றி பெருமை பேசுகிறார். மக்களவை கவர்வதற்காக தவறான தகவல்களை பரப்புகிறார்.
 
மேலும் வரும் மே 23 ஆம் தேதிவரை பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டாம் என்று பெட்ரோல் நிறுவனத்தைக் கேட்டுள்ளார் மோடி. தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் - டீசல் விலையை ரூ. 5 - 10 வரைக்கும் உயர்த்தவே தற்போது முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

மேலும்  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து ரூ. 69.61 ஆக உள்ளது. கச்சா எண்ணெய்யும் விலையும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments