Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்:வெளியுறவுத்துறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (17:50 IST)
ஜப்பானில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க உள்ளார் என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

வளர்ச்சியடைந்த 20 நாடுகளான அர்ஜெண்டினா, பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, துருக்கி, இங்கிலாந்து, சீனா, துருக்கி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைப்பை சுருக்கமாக ஜி-20 என்று அழைக்கின்றனர்.

இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு ஜப்பான் நட்டின் ஒசாகா நகரில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் ஜூன் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பிரதமர் மோடி பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத் துறை இன்று அறிவித்துள்ளது.

இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் தலைவர்கள் பிரத்மர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments