யாராக இருந்தாலும் தவறு தவறுதான் – கட்சியினருக்கே தண்டனை கொடுக்கும் மோடி?

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (18:03 IST)
”யாருடைய மகனாக இருந்தாலும் அரசு அதிகாரியை தாக்குவது கண்டிக்கத்தக்கது” என பிரதமர் மோடி பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் மத்தியபிரதேசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அரசு அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் அடித்துள்ளார் அந்த பகுதி எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய் வர்கியா. பாஜக எம்.எல்.ஏவான இவர் முக்கிய பாஜக தலைவரான ஆகாஷ் வரிகியாவின் மகன்.

இந்த வன்முறை சம்பவம் பற்றி எதிர்கட்சிகள் விவாதங்களை கிளப்பியுள்ளன. மக்களவையில் பேசும்போது இதுபற்றி பிரதமர் மோடி “சட்டத்தை மீறி ஒரு அரசு அதிகாரியை தாக்குவது என்பது கண்டிக்கத்தக்கது. அவர் யாராக இருந்தாலும் தவறு தவறுதான்” என சொன்னதாக கூறப்படுகிறது.

எங்க மோடி எவ்வளவு கண்டிப்பானவர் பார்த்தீர்களா என சில பாஜகவினர் இந்த செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கொடுத்த பணத்தில் இழப்பீட்டு பணத்தில் மருமகன் கொண்டாட்டம்! மாமியார் கதறல்!

10 மாத குழந்தைக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு.. குலுக்கலில் கிடைத்த அதிர்ஷ்டம்..!

பயிர்ச்சேதமோ ரூ.72,466.. அரசு கொடுத்த இழப்பீடு வெறும் ரூ.2.30.. அதிர்ச்சி அடைந்த விவசாயி..!

டிவி சீரியல் நடிகைக்கு ஆபாச புகைப்படம், வீடியோ அனுப்பிய மர்ம நபர்.. காவல்துறை நடவடிக்கை..!

நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துபவரா? மத்திய அரசு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments