Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைன் விவகாரம்: ரஷ்ய அதிபருக்கு ஆலோசனை கூறிய பிரதமர் மோடி

உக்ரைன் விவகாரம்: ரஷ்ய அதிபருக்கு ஆலோசனை கூறிய பிரதமர் மோடி
, வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (07:50 IST)
உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில ஆலோசனைகளை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி இதில் தலையிட்டு ரஷ்ய அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. 
 
இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான வேறுபாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்
 
பேச்சுவார்த்தை மற்றும் உரையாடலுக்கு உடனடியாக ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்த பிரதமர் மோடி உக்ரைனில் உள்ள இந்திய மக்கள் குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா பெரும் கவலை தெரிவிப்பதாக அதிபரிடம் பிரதமர் மோடி கூறினார்.
 
மேலும் உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக இந்தியர்கள் வெளியேறுவதற்கும் இந்தியா திரும்புவதற்கும் இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரலாறு காணாத வகையில் கச்சா எண்ணெய் உயர்வு: ஆனாலும் உயராத பெட்ரோல் விலை!